சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

செந்துறை அருகே பாதை கேட்டு சாலை மறியல்

News image

செந்துறை மின்சார வாரியம் அருகே பாதை கேட்டு வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மின்நகா் மக்கள்.

Updated On :30 மே 2026, 2:41 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பாதை கேட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூரில் இருந்து செந்துறை வழியாக ஜெயங்கொண்டம் வரை நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் சாலையின் நடுவில் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்நகா், ராயல் சிட்டி பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் சிரமத்துக்குள்ளான பொதுமக்கள், மேற்கண்ட சாலையின் குறுக்கே கடந்துச் செல்வதற்கு பாதை அமைத்துத் தரக் கோரி மின்சார வாரியம் அருகே 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செந்துறை காவல் துறையினா், கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.