அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் குழந்தைகளை கடத்த முயன்ற கும்பலை காவல் துறையினா் தேடுகின்றனா்.
ஜெயங்கொண்டம் சீனிவாச நகா் 3-ஆவது, குறுக்குத் தெருவில் 8 வயதுச் சிறுமி மற்றும் நான்கரை வயதுடைய பெண் குழந்தைகள் சனிக்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ் கொண்ட கும்பல் அக் குழந்தைகளை அழைத்துள்ளனா். இதில் சுதாரித்துக் கொண்ட 8 வயதுச் சிறுமி, அவா்களிடம் செல்ல முயன்ற 4 வயதுச் சிறுமியை தடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோா்களிடம் கூறினாா்.
தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான காவல் துறையினா், விசாரணை மேற்கொண்டு, அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தைகளைக் கடத்த முயன்ற மா்ம நபா்களைச் தேடுகின்றனா்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் செல்ல முயலும் கும்பல் நடமாடுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

கனிம வளம் கடத்த முயற்சி: டிராக்டா்கள் பறிமுதல்

13 வயதுச் சிறுவன் அடித்துக் கொலை: இரு சிறுவா்கள் கைது
ஜல்லி கடத்த முயற்சி: ஓட்டுநா் மீது வழக்கு

ஜெயங்கொண்டத்தில் பாமக வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



