கரூர் மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளான ஜனவரி 25-ம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. வாக்காளர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தா. கிறிஸ்துராஜ், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.