கரூரில் சுப்ரமணியன்சுவாமி உருவப்படத்தை எரித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் அவதூறு பேசியதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியைக் கண்டித்து, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர், மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, கொங்கு இளைஞர் பேரவையின் மாவட்டத் தலைவர் அருள்குமார் தலைமை வகித்தார். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டத் தலைவர் சாதிக் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சுப்ரமணியன்சுவாமியின் உருவப்படத்தை எரித்து கண்டனக்குரல் எழுப்பினர். இதில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சிவசாமி, ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!

ஐஐஎம் மும்பை-ல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

7 மாதங்களுக்கு முன்பு அணியில் இல்லை... அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் மிரட்டிய ஆஸி. கோல்கீப்பர்!

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


