/
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீபா பேரவையினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் ஜவஹர் பஜார் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் விகேடி. துரைசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் மூர்த்தி, நகரச் செயலாளர் ராதா, ஒன்றியச் செயலாளர்கள் ராஜேந்திரன் (கடவூர்), நல்லுசாமி (கரூர்), சுப்ரமணி (தோகைமலை) மற்றும் குளித்தலை நகரச் செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








