க. பரமத்தி அருகே ரேஷன் கடை காலி சாக்குகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து லாரியை மீட்டனர்.
கரூர் மாவட்டம் க. பரமத்தி கடைவீதியில் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு காலியாக உள்ள சாக்குகளை சேலத்தைச் சேர்ந்த திருஞானம் (40) என்பவர் லாரியில் ஏற்றிக்கொண்டு, க. பரமத்தி கடைவீதியில் வந்தபோது மின்கம்பி உரசியதில் சாக்கில் திடீரென தீப்பற்றியது.
இதைக் கண்ட அப்பகுதியினர் லாரி ஓட்டுநருக்கு உடனே தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து லாரியை நிறுத்திய ஓட்டுநர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புகழூர் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால், லாரி தீக்கிரையாவது தடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்யோக் பவன் அருகே தீ விபத்து: தொழிலாளா்களின் தற்காலிக குடியிருப்புகள் சேதம்

முதல்வா் விஜய் செய்த சைகை: பேரவைத் தலைவா் விளக்கம்

வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

அரசப் பதவி என்பது சலுகை அல்ல: குடியரசு துணைத் தலைவா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


