க. பரமத்தி அருகே ரேஷன் கடை காலி சாக்குகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து லாரியை மீட்டனர்.
கரூர் மாவட்டம் க. பரமத்தி கடைவீதியில் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு காலியாக உள்ள சாக்குகளை சேலத்தைச் சேர்ந்த திருஞானம் (40) என்பவர் லாரியில் ஏற்றிக்கொண்டு, க. பரமத்தி கடைவீதியில் வந்தபோது மின்கம்பி உரசியதில் சாக்கில் திடீரென தீப்பற்றியது.
இதைக் கண்ட அப்பகுதியினர் லாரி ஓட்டுநருக்கு உடனே தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து லாரியை நிறுத்திய ஓட்டுநர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புகழூர் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால், லாரி தீக்கிரையாவது தடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லண்டனில் கத்திக் குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலை

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


