ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

முத்தனூரில்  டிரான்ஸ்பார்மர் பழுது:  மின்தடையால் அவதி

நொய்யல் அருகே முத்தனூரில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் ஏற்பட்ட மின்தடையால் திங்கள்கிழமை இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:34 am IST

நொய்யல் அருகே முத்தனூரில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் ஏற்பட்ட மின்தடையால் திங்கள்கிழமை இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு அருகேயுள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் நடைபெறுகிறது.  
இந்த டிரான்ஸ்பார்மர் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென பழுதானதால் மின்தடை ஏற்பட்டு, அப்பகுதி இருளில் மூழ்கியது. இதுதொடர்பாக உடனே அப்பகுதியினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
ஆனால் யாரும் வராததால் இரவு முழுவதும்அப்பகுதி இருளில் மூழ்கியது. 
மேலும் தற்போது பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வுக்கு படிக்க இயலாமல் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.