நொய்யல் அருகே முத்தனூரில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் ஏற்பட்ட மின்தடையால் திங்கள்கிழமை இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு அருகேயுள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் நடைபெறுகிறது.
இந்த டிரான்ஸ்பார்மர் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென பழுதானதால் மின்தடை ஏற்பட்டு, அப்பகுதி இருளில் மூழ்கியது. இதுதொடர்பாக உடனே அப்பகுதியினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் யாரும் வராததால் இரவு முழுவதும்அப்பகுதி இருளில் மூழ்கியது.
மேலும் தற்போது பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வுக்கு படிக்க இயலாமல் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


