மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்  233 பேருக்கு பணி நியமன ஆணை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வான 233 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:43 am

DIN

கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வான 233 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். 
கரூர், தாந்தோணி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வளாக நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தேர்வான 233 பேருக்கு ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில்  பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கிப் பேசியது: 
அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணல் நடத்திட முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கரூர் மற்றும் குளித்தலையில் உள்ள அரசு கல்லூரிகளைச் சேர்ந்த 512 மாணவ, மாணவிகள் பங்கேற்றதில், 233 மாணவ, மாணவிகள் பல்வேறு நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் தேர்வாகியுள்ளனர் என்றார்.  
நிகழ்ச்சியில், ஆட்சியர் பேசியது: 
வளாக நேர்காணல் நடத்திட  அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். அதன் விளைவாக அப்பல்லோ, ஐசன், பேங்சோன், எச்.பி. நிதி நிறுவனம், ஆர்.சி.எஸ்.எஸ், பஜாஜ், டெக்னோசாப்ட் யுரேகா, அம்டெக்ஸ் சிஸ்டம் உள்ளிட்ட 11 நிறுவனங்களில் இருந்து வந்து வளாக நேர்காணல் நடத்தி கரூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் நன்றி என்றார்.     
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பாண்டியம்மாள், மாவட்ட தொழில்மைய மேலாளர் ரமேஷ், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, நேர்காணல் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர்.காளியப்பன், எஸ்.திருவிகா, வை.நெடுஞ்செழியன், கமலக்கண்ணன், மார்க்கண்டேயன், விசிகே.ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.