பெரியாரின் 45 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, கரூரிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட திமுக சார்பில், திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு நகரச் செயலர் எஸ்.பி.கனகராஜ் தலைமையில், வழக்குரைஞர் மணிராஜ், சுப.ராஜகோபால் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில், மாநில சட்டத்துறை துணைத்தலைவர் வழக்குரைஞர் மு.க.ராஜசேகரன் , பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்டச் செயலர் காளிமுத்து உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கரூர் லைட்ஹவுஸ் கார்னரிலுள்ள பெரியார் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, மாவட்டச் செய்தித்தொடர்பாளர் இளங்கோ, தொண்டரணி அமைப்பாளர் வழக்குரைஞர் மன்னன், நகரச் செயலர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வருக்கு கீரை அனுப்பும் போராட்டம்: தமிழ்ப் புலிகள் கட்சியினா் கைது

மகள் கொலை வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வந்த தந்தை கொலை
ஆன்லைன் லாட்டரி விற்பனை: இளைஞா் கைது

மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


