விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

பெரியாரின் 45 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி,  கரூரிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல்

Updated On :25 டிசம்பர் 2018, 9:20 am IST

பெரியாரின் 45 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி,  கரூரிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர்  திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட  திமுக சார்பில்,  திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு நகரச் செயலர் எஸ்.பி.கனகராஜ்  தலைமையில், வழக்குரைஞர் மணிராஜ், சுப.ராஜகோபால் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில், மாநில சட்டத்துறை துணைத்தலைவர் வழக்குரைஞர் மு.க.ராஜசேகரன் , பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்டச் செயலர் காளிமுத்து உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
 கரூர் லைட்ஹவுஸ் கார்னரிலுள்ள பெரியார் சிலைக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, மாவட்டச் செய்தித்தொடர்பாளர் இளங்கோ, தொண்டரணி அமைப்பாளர் வழக்குரைஞர் மன்னன், நகரச் செயலர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.