கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தினர் சார்பில்  அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற

Updated On :25 டிசம்பர் 2018, 9:29 am IST

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தினர் சார்பில்  அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் கேடயம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா தாந்தோணிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  மாவட்டத்தலைவர் எஸ். சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயல் தலைவர் ஆர். தேவராஜ் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் எஸ். பாலாஜி, துணைத் தலைவர் பி. முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  மாநில அவைத் தலைவர் ஊத்துக்குளி பிஎஸ். மணி, மாநில பொதுச் செயலர் முன்னாள் நீதிபதி வி. தங்கராஜ், மாநில கௌரவ ஆலோசகர் க. ராமகிருஷ்ணன் ஆகியோர்  மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயம் வழங்கிப் பேசினர்.
மாநில பொருளாளர் ஏ. ரத்தினபாண்டியன், துணைச் செயலர் ஆர். செல்லகாமு, அகத்தியா நினைவு அறக்கட்டளைத் தலைவர் கோ. கலையரசன், அஜீத் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.