வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தினர் சார்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் கேடயம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா தாந்தோணிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தலைவர் எஸ். சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயல் தலைவர் ஆர். தேவராஜ் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் எஸ். பாலாஜி, துணைத் தலைவர் பி. முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில அவைத் தலைவர் ஊத்துக்குளி பிஎஸ். மணி, மாநில பொதுச் செயலர் முன்னாள் நீதிபதி வி. தங்கராஜ், மாநில கௌரவ ஆலோசகர் க. ராமகிருஷ்ணன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயம் வழங்கிப் பேசினர்.
மாநில பொருளாளர் ஏ. ரத்தினபாண்டியன், துணைச் செயலர் ஆர். செல்லகாமு, அகத்தியா நினைவு அறக்கட்டளைத் தலைவர் கோ. கலையரசன், அஜீத் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! ரூ.2,500 எப்போது?

பாலியல் வழக்கில் நார்வே பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை!

காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் விலகல்; இங்கிலாந்துக்கு பின்னடைவா?

சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


