கரூர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டனர்.
வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமமுகவினர் தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி, திண்ணப்பாநகர், ராயனூர், தாந்தோணிமலை மற்றும் நீலிமேடு, அண்ணா நகர் பகுதியில் மத்திய நகரச் செயலர் கோல்டுஸ்பாட் ராஜா தலைமையில் அக்கட்சியினர் தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மாநில மருத்துவர் அணி துணைச் செயலர் மனோகரன், மாவட்டத் துணைச் செயலர் தாரணிசரவணன் ஆகியோர் பொதுமக்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினர்.
நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலர் ஆர்எம்டி. தியாகராஜன், மாவட்ட பேரவை இணைச் செயலர் கார்த்திகேயன், , நகர மீனவரணிச் செயலர் மணிகண்டன் உள்பட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓமன் அருகே சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் மாயம்

தென்னாப்பிரிக்கா: குடியிருப்புப் பகுதியில் மா்ம கும்பல் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு

மின் தடைகளை சரிசெய்ய 125 ரோந்து வாகனங்கள்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தொடங்கி வைத்தாா்






