சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அமமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

கரூர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டனர்.

Updated On :23 ஜூலை 2018, 8:36 am IST

கரூர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டனர்.
வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமமுகவினர் தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி, திண்ணப்பாநகர், ராயனூர், தாந்தோணிமலை மற்றும் நீலிமேடு, அண்ணா நகர் பகுதியில் மத்திய நகரச் செயலர் கோல்டுஸ்பாட் ராஜா தலைமையில் அக்கட்சியினர் தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டனர்.
 இதில் சிறப்பு விருந்தினராக மாநில மருத்துவர் அணி துணைச் செயலர் மனோகரன், மாவட்டத் துணைச் செயலர் தாரணிசரவணன் ஆகியோர் பொதுமக்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினர்.
நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட  துணைச் செயலர் ஆர்எம்டி. தியாகராஜன், மாவட்ட பேரவை இணைச் செயலர் கார்த்திகேயன், , நகர மீனவரணிச் செயலர்  மணிகண்டன் உள்பட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.