கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பெ. காளிதாஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சின்னுசாமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலர் தா. கணேசன் கண்டன உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு. சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். இதில் ஏழைக் குழந்தைகளின் கல்வி நலன் கருதி அரசுப் பள்ளிகளை மூடும் திட்டத்தைக் கைவிட வேண்டும், தொடக்கக் கல்வித் துறையை ஒழிக்கும் நடவடிக்கையையும் கைவிட வேண்டும். 2017-18-ம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. திரளான ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலர் ஜ. ஜெயராஜ் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









