கரூர் மாவட்டக் காவல் துறையில் பணிபுரிந்து புதன்கிழமை ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.
கரூர் மாவட்டம், குளித்தலை போக்குவரத்துக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ரங்கன், கரூர் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய சின்னையா ஆகிய இருவரும் புதன்கிழமை பணி ஓய்வு பெற்றனர்.
இருவரின் பணியைப் பாராட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் சால்வை அணிவித்து, பரிசு வழங்கிப் பாராட்டினார்.
காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.