பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக முகநூலில் கருத்து தெரிவித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவர், வரும் ஜூலை 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக பிரமுகருமான நடிகர் எஸ். வி. சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகக் கருத்து கூறியதாக, அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி இந்திய குடியரசுக் கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கடந்த ஏப்.23-இல் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-இல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை நீதிபதி சுப்பையா முன் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா வரும் ஜூலை 5 ஆம் தேதி நடிகர் எஸ்.வி. சேகர் கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

