முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், ரத்த தானம் செய்தனர்.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், முன்னாள் மாவட்டத் தலைவருமான பேங்க் கே. சுப்ரமணியன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமை முன்னாள் மாவட்டத் தலைவர் ரத்த தானம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி முன்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜிவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்எஸ்.பிரேம்குமார், மாநில விவசாய அணிச் செயலாளர் பி.ஜெயபிரகாஷ், காங்.சேவாதள தலைவர் டி.சுப்ரமணி, வர்த்தக காங். தலைவர் சதீஷ்குமார், இளைஞர் காங்.பொதுச் செயலாளர் நவீன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், முன்னாள் எம்எல்ஏ வெள்ளியணை ராமநாதன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சின்னையன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் என். நாட்ராயன், கரூர் வட்டாரத்தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

வேடிக்கை பார்க்கும் 'ஆம் ஆத்மி'!

துலா ராசிக்கு பாராட்டு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

