கரூரில் ரூ.10 லட்சம் கேட்டு தனியார் நிறுவன ஊழியரை கடத்திச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த ரத்தினம் மகன் ருத்ரசாமி(29). இவர் கோவையிலுள்ள தனியார் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கரூர் வெங்கமேட்டில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த புதன்கிழமை (மே 16) வந்தார். அன்றிரவு வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தபோது வேனில் வந்த அடையாளம் தெரியாத 5 மர்மநபர்கள் திடீரென ருத்ரசாமியை வேனுக்குள் இழுத்துப் போட்டு கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது தந்தைக்கு செல்லிடப்பேசியில் ரூ.10 லட்சம் ரொக்கம் கேட்டு மர்ம நபர்கள் போனைத் துண்டித்து விட்டனராம். இதுதொடர்பாக ரத்தினம் சனிக்கிழமை இரவு வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகரன் உத்தரவின்பேரில் வெங்கமேடு காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

மக்களுக்கு இலவசமாக ஓஆர்எஸ் பவுடர் வழங்க ஆளுநரிடம் கோரிக்கை!

வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: மாவட்ட தோ்தல் அதிகாரி!

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமி தேரோட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

