தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி: காதலன் மரணம்

கரூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம்  குடித்து தற்கொலைக்கு முயன்றதில் காதலன் இறந்தார்.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:14 am IST

கரூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம்  குடித்து தற்கொலைக்கு முயன்றதில் காதலன் இறந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த வயலூரைச் சேர்ந்தவர் சொர்ணம் (45), விவசாயி. இவர் லாலாப்பேட்டை-சீகம்பட்டிச்சாலையில் விவசாயம் செய்துவந்துள்ளார்.  இந்நிலையில் உறவுக்கார விதவை பெண்ணான அதே பகுதியைச் சேர்ந்த அமுதா(40) என்பவரோடு சொர்ணத்திற்கு தொடர்பு ஏற்பட்டதாம். 
இதுகுறித்து சொர்ணம் குடும்பத்துக்கு தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து முடிவு செய்துள்ளனர். இதையடுத்து திங்கள்கிழமை இரவு விவசாய நிலத்தில் இருவரும் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்துள்ளனர். 
இதை செவ்வாய்க்கிழமை கண்ட அப்பகுதியினர் இருவரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சொர்ணம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அமுதா மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக லாலாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.