குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

யாருக்கு வாக்களித்தோம் வசதி செயல்விளக்கம்

தாந்தோணிமலையில் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து  மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:10 am IST

தாந்தோணிமலையில் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து  மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த சின்னத்தில் வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், வரும் மக்களவைத் தேர்தல் 2019-ல் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தணிக்கை இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு, பயிற்சி அளிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 6 வாகனங்கள் வீதம் மொத்தம் 24 வாகனங்கள் கடந்த 9-ம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு வாகனத்திலும் வாக்காளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த 2 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கரூர் மாவட்டத்தில் 608 வாக்குச்சாவடி அமைவிடங்களில் உள்ள 1031 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று செயல் விளக்கம் அளித்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு குழுவினரும் நாள் ஒன்றுக்கு நான்கு வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு சென்று செயல் விளக்கம் அளிக்கிறார்கள். 
கரூர் தாந்தோணிமலையில் உள்ள வாக்குச்சாவடி அமைவிடம் அருகே செவ்வாய்க்கிழமை தோரணக்கல்பட்டி வருவாய் ஆய்வாளர் சிவகாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வாக்காளர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்து தாங்கள் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்த்து தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். நிகழ்ச்சியில் நகர சர்வேயர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.