/
மது குடிக்க பணம் கேட்டு இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் முத்துராஜபுரத்தைச் சேர்ந்தவர் மோகன் மகன் பிரபு (24) .இவர் அங்குள்ள பகவதியம்மன் கோயில் அருகே திங்கள்கிழமை இரவு நின்றபோது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் மகன் சரவணன்(26) பிரபுவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
அவர் இல்லை எனக்கூறியதால் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடர்பாக பிரபு அளித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







