நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூரில் ஆட்சியரகம் முற்றுகை : 34 போ் கைது

கரூரில் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 34 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:38 pm

DIN

கரூரில் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 34 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் கரூா் ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்.கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பெ.ஜெயராமன், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் கந்தசாமி, சுவாதி பெண்கள் இயக்கத்தின் கிறிஸ்டினாமேரி, பாக்கியம் உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து முழக்கங்கள் எழுப்பி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து மாலை 6 மணியளவில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 34 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.