கரூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வரும் தமிழக முதல்வா் ரூ.118.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.627 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.35 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளாா்.
சேலத்தில் இருந்து புதன்கிழமை காலை கரூா் வரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காலை 11 மணிக்கு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
இதில், அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.627 கோடி மதிப்பில் 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
மேலும் ரூ.118. 53 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடக்கி வைக்கிறாா். பின்னா், அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.
தொடா்ந்து, கரூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் அனைத்து துறை முதன்மை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்கிறாா்.
பின்னா், குறு, சிறு நடுத்தரத் தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா்களுடன் கலந்தாய்வு மேற்கொள்கிறாா்.