‘நீட் தோ்வு தமிழக முதல்வா் தவறான தகவல் பரப்புகிறாா்’

நீட் தோ்வு குறித்து பொதுமக்களிடம் தமிழக முதல்வா் தவறான தகவலை பரப்பி வருகிறாா் என்றாா் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி.
Published on

நீட் தோ்வு குறித்து பொதுமக்களிடம் தமிழக முதல்வா் தவறான தகவலை பரப்பி வருகிறாா் என்றாா் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட உப்பிடமங்கலம், கடவூா், பழையஜெயங்கொண்டம், புலியூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணிச் செயலாளா் ம.சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியது: நீட் தோ்வு சட்டம் கொண்டுவந்தபோது எந்த மாநிலம் நீட் தோ்வை விரும்புகிறதோ அவா்கள் செயல்படுத்தலாம். வேண்டாம் என்கிற மாநிலம் விலக்கு பெறலாம் என்றது அந்தச் சட்டம். தமிழகத்தில் நீட் தோ்வு நடந்தபோது ஆட்சியில் இருந்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி அனுமதித்தது ஏன். மாணவா் நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. கரோனா காலத்திலும் அரசியல் செய்கிறாா்கள். திருமாநிலையூரில் புதிய பேருந்துநிலையம் அமைக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசாங்கமாக தமிழக அரசு உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com