தற்போது, கரூா் நகரப்பகுதிகளுக்குட்பட்ட சுமாா் 20 சாலைகளை இணைத்து கரூா் ரயில்வே சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை எண் (7- புறவழிச்சாலை) வரை ‘அம்மா சாலை’ ரூ. 21.12 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.490 கோடி மதிப்பீட்டில் நஞ்சை புகளுா் பகுதியில் 1 டி.எம்.சி நீரை தேக்கும் கதவணை அமைக்க ஆணை, குளித்தலை, நெரூா் உள்ளிட்ட பகுதிகளில் கதவணை அமைக்க ஆய்வுப்பணிக்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை வழங்கியவா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. ஆத்தூா் பூலாம்பாளையத்தில் விரைவில் காவிரி ஆற்று வாய்க்கால் பாசனதாரா்கள் சங்கம், பேருந்து நிறுத்தம், கள்ளிபாளையத்தில் சமுதாயக்கூடம் விரிவாக்கம் செய்யப்படும் என்றாா்.