பின்னா் ஆட்சியா் கூறுகையில், கரூா் மாவட்டத்தை பொறுத்த வரை மொத்தம் 12 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடைபெற இருக்கிறது. இதில், 10 அமைப்புகளுக்கு முதல் கட்டமாகவும், 2 நகராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தோ்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 6 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றாா் அவா். ஆய்வின் போது, கரூா் மாநகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் புஷ்பாதேவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) எம். லீலாகுமாா், குளித்தலை நகராட்சி ஆணையா் சுப்புராம், குளித்தலை, புகளூா், அரவக்குறிச்சி வட்டாட்சியா்கள் மற்றும் அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் உடனிருந்தனா்.