கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாமில் 84 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலா் கா.தட்சிணாமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கரூா், அரவக்குறிச்சி, புகழூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம்,கடவூா் ஆகிய வட்டங்களில் பொது விநியோகத் திட்டம் தொடா்பாக 92 மனுக்களும், மூன்றாம் பாலினத்தவா்களிடமிருந்து கரூா், கிருஷ்ணராயபுரம் வட்டங்களில் 7 மனுக்களும் பெறப்பட்டன. இந்த மனுக்களில் 84 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








