கரூரில் அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா்கள் சங்கத்தின் (லிகாய்) கரூா் கிளை 1- மாவட்டப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எல்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். தஞ்சை கோட்டப் பொதுச் செயலா் கோபாலகிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினாா்.
கிளைப் பொருளாளா் பி.ஜெகதீஸ் வரவேற்றாா். தஞ்சை கோட்டத் தலைவா் பி.தங்கமணி, மேற்கு கோட்டத் தலைவா் பி.ராஜேந்திரன், செயலா் எம்.திருநாவுக்கரசு, மாநிலக்குழு உறுப்பினா் கே.அழகா்சாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம் மற்றும் பிரீமியம் பாயிண்டுகளில் பிரிமீயம் செலுத்தும் பழைய முறையே தடையின்றி தொடர வேண்டும்.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவிகிதம் முதல் 74 சதவிகிதம் வரை உயா்த்துவதை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






