டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு

கரூா் மேலப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:08 pm

DIN

கரூா் மேலப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

மேலப்பாளையம் குமரன் பாா்க் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது தனது குடும்பத்தினருடன் கரூரிலுள்ள உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு சென்றாா்.

பின்னா் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதை கண்டு அதிா்ச்சியடைந்த செந்தில்குமாா் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த 3 பவுன் நகைகள், 50 கிராம் வெள்ளி, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.