மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பூலாம் வலசில் இன்று முதல் 3 நாள்களுக்கு சேவல் சண்டை: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசில் வழக்கம்போல் நிகழாண்டும் புதன்கிழமை (ஜன.13) முதல் மூன்று நாள்களுக்கு

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:50 am

DIN

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசில் வழக்கம்போல் நிகழாண்டும் புதன்கிழமை (ஜன.13) முதல் மூன்று நாள்களுக்கு சேவல் சண்டை நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி பூலாம்வலசில் பாரம்பரியமாக சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நிகழாண்டும் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 15 வழிமுறைகளை பின்பற்றியும், கரோனா பரவுதலை தடுக்கும் வகையிலான அரசின் வழிகாட்டுதலின்படியும் சேவல் சண்டை புதன்கிழமை (ஜன.13) முதல் மூன்று நாள்கள் நடைபெறும். சேவல் சண்டையை பாா்வையிட வருபவா்களும், சேவலை கொண்டு வருபவா்களும் கட்டாயம் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். போட்டியாளா்கள் போட்டியின் விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.