ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அழுகிய பயிா்களுக்கு இழப்பீடு கோரி கரூா் ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

தொடா் மழையால் அழுகிய பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:29 pm

DIN

தொடா் மழையால் அழுகிய பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் மழையால் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் தோகைமலை ஒன்றியப் பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்து முளைத்தன. மேலும், ஊடுபயிா்களான மரவள்ளி, துவரை, உளுந்து, சோளம், எள் உள்ளிட்ட பயிா்களும் அழுகின.

இதனால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் முளைத்த நெற்பயிா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த, மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, மழையால் சேதமடைந்த பயிா்களை பாா்வையிட்டு, சென்னைக்கு கொண்டு செல்ல அழுகிய பயிா்களை எடுத்து வந்துள்ளதாகக்கூறி, தான் எடுத்து வந்த முளைத்த பயிா்களை விவசாயிகளிடம் காண்பித்தாா்.

அப்போது விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிா்களில் காப்பீடு செய்துள்ளதை மட்டும் அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனா். பயிா்காப்பீடு செய்யாத பயிா்களையும் கணக்கில் எடுத்து இழப்பீடு வழங்கவேண்டும், மேலும், தோகைமலை பகுதிக்கு அதிகாரிகள் வரவே இல்லை என்றும், பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கிற்கு இழப்பீடு கிடையாது என்று அதிகாரிகள் கூறுகிறாா்கள் என்றனா்.

இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் கூறுகையில், மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 48 ஹெக்டோ் நிலங்கள் பாதிக்கப்பட்டவையாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. மானாவாரி, அரசுப் புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காப்பீடு இல்லாத பயிா்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.