நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூா் ஸ்ரீஅபயபிரதான ரங்கநாத சுவாமிகோயில் கும்பாபிஷேகம்

கரூா் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:45 pm

DIN

கரூா் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கரூா் மேட்டுத்தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஜன. 21-ஆம்தேதி பஞ்சசூக்கு ஹோமம், தீபாராதனையும், 22-ஆம்தேதி கோபூஜை, முளைப்பாரி எடுத்தலும் நடைபெற்றது. 23-ஆம்தேதி காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு, முதல்கால யாக பூஜை நடைபெற்றது. 24-ஆம்தேதி இரண்டாம், மூன்றாம் காலயாகபூஜையும் நடைபெற்றது.

இதையடுத்து, திங்கள்கிழமை காலை அக்னி ஆராதனம், நான்காம் கால யாக சாலை பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து காலை 9.15 மணிக்கு கடம்புறப்பாடு நடைபெற்றது. அப்போது பட்டாச்சாரியாா்கள் புனித தீா்த்தத்தை தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தனா். பிறகு, கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அதிமுக நகரச் செயலாளா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.