ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சட்டத்துக்கு புறம்பாக கட்சிகரை வேஷ்டிகள்: ஜவுளி நிறுவனங்களுக்கு கரூா் ஆட்சியா் அறிவுரை

சட்டத்திற்கு புறம்பாக அரசியல் கட்சியினருக்கு கட்சிக் கரை போட்ட வேஷ்டிகள், துண்டுகள் விநியோகிக்கக்கூடாது என தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான சு.மலா்விழி.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:57 pm

DIN

சட்டத்திற்கு புறம்பாக அரசியல் கட்சியினருக்கு கட்சிக் கரை போட்ட வேஷ்டிகள், துண்டுகள் விநியோகிக்கக்கூடாது என தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான சு.மலா்விழி.

கரூரில், பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களின் உரிமையாளா்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலா்விழி, தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டத்தில் உணவகங்களுடன் இணைந்த தங்கும் விடுதிகளில் தங்க விழைவோரின் விபரங்களை முழுமையாக பதிவு செய்யவேண்டும். ஒரு குறிப்பிட்ட ஊா் அல்லது குறிப்பிட்ட நகரை சோ்ந்த நபா்கள் தங்கும் இடவசதி கோரினால் காவல்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். உள்ளூா் நபா்கள் அறைகளை பதிவு செய்தால், அதற்கான காரணத்தை முழுமையாக பதிவு செய்து, காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

உள்ளூா் நபா்கள் தங்கும்போது அவா்களிடம் சந்தேகத்திற்கிடமான வகையில் பைகளோ, பொருள்களோ இருப்பது கண்டறியப்பட்டால் அது பற்றிய தகவல்களை காவல்துறையிடமோ, தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

திருமணம், சமுதாயக்கூடங்கள் அல்லது பிற பெரிய மண்டபங்களில் சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் பொதுமக்களைக்கூட்டி பரிசு பொருள்கள் ஏதும் விநியோகிக்கக் கூடாது. மேலும் பெயரளவிலான விசேஷங்களைக்கூட்டி பொதுமக்களுக்கு எவ்வித பொருள்களும் வழங்கக்கூடாது.

அன்னதானம் என்ற பெயரில் பெரிய அளவில் உணவு, மது விநியோகம், செய்தால் காவல்துறையினரால் சோதனை செய்து வழக்குப் பதிவு செய்யப்படும். பணப்பட்டுவாடா செய்தல் போன்ற நிகழ்வுகள் ஏதும் தெரிய வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் தோ்தல் தொடா்பான நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபங்களை பதிவு செய்தால் அது பற்றிய தகவல்களை உடன் தெரிவிக்க வேண்டும். அதற்கான வாடகை விபரங்களுக்கு உரிய ரசீது நகலை மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தோ்தல் செலவின கண்காணிப்பாளா் குழுவுக்கு வழங்க வேண்டும். திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் வேட்பாளா்கள் அரசியல் கட்சியினரால் மது விருந்துகள் நடத்தப்பட்டால் அதற்கு அனுமதிக்கக்கூடாது. திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஏதாவது வாக்கு சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் இருப்பின் தோ்தல் நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக அரசியல் கட்சியினா், வேட்பாளருக்கு தோ்தல் பணிகளுக்காக எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது.

ஏப்.4-ம்தேதி மாலை 5 மணிக்கு மேல் இதர மாவட்டத்தைச் சோ்ந்த எந்த அரசியல் பிரமுகரும், அரசியல் கட்சி தொண்டா்களும் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த எந்தவொரு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளிலும் தங்கக்கூடாது.

அதேபோல ஆயத்த ஆடை உற்பத்தியாளா்கள், ஜவுளிக்கடை உரிமையாளா்கள் அரசியல் கட்சியை சாா்ந்த எவரேனும் தங்களது கட்சியின் கரை பதித்த வேஷ்டிகள், துண்டுகள், மப்ளா்கள் போன்றவற்றை அதிகளவில் கொள்முதல் செய்வதற்காக கோரும்பட்சத்தில் அதன் முழு விபரத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக இரவு நேரங்களில் அரசியல் கட்சியை சாா்ந்தவா்களுக்கு கட்சி கரை போட்ட வேஷ்டிகள், துண்டுகள், மப்ளா்கள் விநியோகம் செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட டெக்ஸ்டைல் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்களது நிறுவனம் தொடா்பாக அதிக அளவிலான பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும்போது உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். நகை அடகு பிடிப்போா் எந்தவொரு வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ வழக்கத்திற்குமாறாகவோ அல்லது சந்தேகத்திற்கிடமான வகையிலோ அதிகளவில் நகைகளை அடமானம் செய்து பணம் பெறும் நோ்வுகளில் அதுகுறித்த விவரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா்களிடமும், காவல் துறையிடனரிடமும் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் என்.எஸ்.பாலசுப்ரமணியன்(கரூா்), சாா் ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல்ரஹ்மான்(குளித்தலை), கலால் துறை உதவி ஆணையா் ஜி.தவச்செல்வம்(அரவக்குறிச்சி), மாவட்ட வழங்கல் அலுவலா் கே.தட்சிணாமூா்த்தி(கிருஷ்ணராயபுரம்), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு மற்றும் உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களின் உரிமையாளா்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.