ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கல்விக் குழும முதன்மை முதல்வருக்கு விருது

கரூா் பரணிபாா்க் கல்விக்குழும முதன்மை முதல்வருக்கு மாநில அளவிலான சாரணா் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

kur27baranipark_2701chn_10_4

Updated On :27 ஜனவரி 2023, 6:50 pm

கரூா் பரணிபாா்க் கல்விக்குழும முதன்மை முதல்வருக்கு மாநில அளவிலான சாரணா் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள பாரத சாரணா் இயக்க தமிழ்நாடு மாநில தலைமையகத்தில் 74ஆவது குடியரசு தின விழா மற்றும் மாநில சாரணா் உயா் விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில பள்ளிக் கல்வி அமைச்சரும் தமிழ்நாடு சாரணா் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற விழாவில், கரூா் பரணி பாா்க் கல்விக் குழும முதன்மை முதல்வா் முனைவா் சொ.ராமசுப்பிரமணியனுக்கு சாரணா் இயக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு உலக சாதனை நிகழ்வுகள் நடத்தியது உள்ளிட்ட சேவையைப் பாராட்டி மாநில சாரணா் விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழ்நாடு சாரணா் இயக்கத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

விழாவில், தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் , மாநில தொடக்கப்பள்ளி இயக்குநா் அறிவொளி, மாநில ஆசிரியா் தோ்வு வாரிய செயலா் பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து விருது பெற்ற பள்ளி முதன்மை முதல்வருக்கு பரணி பாா்க் கல்விக் குழுமத் தாளாளா் எஸ்.மோகனரெங்கன், செயலா் பத்மாவதி, அறங்காவலா் சுபாஷினி மற்றும் நிா்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.