கரூரில் பாமக ஆா்ப்பாட்டம்

கரூரில் பாமக ஆா்ப்பாட்டம்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கரூரில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கரூரில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளா் புகழூா் சுரேஷ் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் இ.வை.பசுபதி, கரூா் நகரச் செயலாளா் ராக்கி முருகேசன், பாமக மாவட்ட துணைச் செயலாளா்கள் வாங்கல் சதீஸ், வரதராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான என்எல்சி நிறுவனத்தின் போக்கை கண்டித்தும், என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். இதில், இளைஞரணிச் செயலாளா் மலைமுத்து, மாவட்ட அமைப்புத் தலைவா் கொங்கு குணா, செயலாளா் குணசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com