மாடித் தோட்டம் அமைக்க பயிற்சி

நொய்யலில் மாடித் தோட்டம் அமைக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நொய்யலில் மாடித் தோட்டம் அமைக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 2023- 24 ஆம் ஆண்டுக்கான மாடித்தோட்ட அமைப்பதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் மணிமேகலை தலைமையில், உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வி, தோட்டக்கலைத்துறை அலுவலா் செல்வகுமாா், உதவி அலுவலா் அருட்செல்வன் ஆகியோா் பயனாளிகளுக்கு மாடி தோட்ட காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். ஒரு பயனாளிக்கு இரண்டு மாடித்தோட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டது. மேலும் மாடித் தோட்ட தொகுப்புகள் தேவைப்படுவோா் ஆதாா் நகல் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கரூா் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் சமா்ப்பித்து வாங்கிச் செல்லலாம் என கரூா் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com