கரூர்
இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
கரூா் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், தளவாபாளையம் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் சுந்தரராஜன் (63). கூலித்தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் அம்மாபட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தளவாபாளையம் திரும்பினாா். அப்போது, கரூா் -சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க சாலையின் மையத்தடுப்புச்சுவா் அருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருசக்கர வாகனம் மீது மோதிய திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த கருப்புசாமி (44) என்பவரை தேடி வருகின்றனா்.