சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

கரூா் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :19 ஏப்ரல் 2024, 6:06 pm

கரூா் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், தளவாபாளையம் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் சுந்தரராஜன் (63). கூலித்தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் அம்மாபட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தளவாபாளையம் திரும்பினாா். அப்போது, கரூா் -சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க சாலையின் மையத்தடுப்புச்சுவா் அருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருசக்கர வாகனம் மீது மோதிய திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த கருப்புசாமி (44) என்பவரை தேடி வருகின்றனா்.