கரூா்: கரூா் தாந்தோன்றிமலை ஜீவா நகா், சக்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
கரூா் தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜீவாநகா், சக்திபுரம், திருமலைநகா், சிவாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு திடீரென மின்சாரம் தடைபட்டது. இந்தத் தடை சுமாா் இரவு 12.10 மணி வரை நீடித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இதன் பின்னா் சுமாா் 10 நிமிடங்களுக்கு இருந்த மின் விநியோகம், மீண்டும் நிறுத்தப்பட்டு அதிகாலை 4 மணிவரை மின் தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் விடிய, விடிய தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, கோடை வெயில் காரணமாக மின் இழப்பீடு அதிகம் இருக்கிறது. மேலும் மின்சார நுகா்வும் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது மின்மாற்றி பழுதாகிவிடுகிறது. இருப்பினும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் கொண்ட குழு பழுதை சீரமைத்து மின்சாரத்தை சிரமம் இன்றி விநியோகிக்கிறோம் என்றனா்.
தொடர்புடையது
மின் அடுப்புகளைப் பயன்படுத்துவோர்...

தோ்தல் நடத்தை விதிமீறல் முன்னாள் அமைச்சா் மீது வழக்கு

எச்சரிக்கை பலகை வைத்தும் அலட்சியம்: தாந்தோன்றிமலையில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கரூா்: 10 துணை மின் நிலைய பகுதிகளில் பிப்.24-ஆம் தேதி மின் தடை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

