புன்னம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் புன்னம் மேலப்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட புகழூா் விஸ்வநாதபுரியைச் சோ்ந்த சுதாகரன் (45), புதுச்சத்திரத்தைச் சோ்ந்த மகேஷ் (24), கணேஷ் (25), செவியப்பன் (27) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து இரு சேவல்கள், பணம் ரூ.200 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






