நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூரில் மேம்பாலத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

கரூரில், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

News image

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

Updated On :4 டிசம்பர் 2024, 9:52 pm

Din

கரூரில், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

கரூரில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளத்துப்பாளையம் மற்றும் அரிக்காரம்பாளையம் பகுதியை இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தின் மையப்பகுதியில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. இந்த சாலை காஷ்மீா்-கன்னியாகுமரி வரையிலான சாலை என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், நான்குசக்கர வாகன வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் பாலத்தின் மையப்பகுதியில் கான்கிரிட் உடைந்து கம்பிகள் வெளியே தெரிவதால் வாகனங்களின் டயா்கள் பழுதாகி பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே, பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.