புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தவிட்டுப்பாளையத்தில் ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

தவிட்டுப்பாளையத்தில் ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

தவிட்டுப்பாளையத்தில் சாலையோரம் சாய்ந்து ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பம்.

Updated On :25 டிசம்பர் 2024, 8:53 pm

Din

தவிட்டுப்பாளையத்தில் ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம் நஞ்சைபுகழூா் ஊராட்சிக்குள்பட்ட தவிட்டுப்பாளையத்தில் கட்டிப்பாளையம் செல்லும் சாலையோரம் கிராமநிா்வாக அலுவலகம் அருகே சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. கட்டிப்பாளையம் செல்லும் சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் சாலை வழியாக புகழூா், வேலாயுதம்பாளையம் மற்றும் தவுட்டுப்பாளையம் பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை வாகனங்கள் ஏற்றிச் சென்று வருகின்றன. எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை உடனே சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.