குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கரூா் குப்பைக்கிடங்கில் மீண்டும் தீ விபத்து

கரூா் குப்பைக்கிடங்கில் திங்கள்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2024, 9:31 pm

Din

கரூா்: கரூா் குப்பைக்கிடங்கில் திங்கள்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 48 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சிக்குச் சொந்தமான அரசு காலனியில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு, அங்கு மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் குப்பைக் கிடங்கில் கடந்த 1-ஆம் தேதி திடீரென தீப்பற்றியது. கரூா் தீயணைப்பு வீரா்கள் இரண்டு நாள்களாக போராடி தீயணை அணைத்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு குப்பைக்கிடங்கில் மீண்டும் தீப்பற்றியது. இதையடுத்து மாவட்ட அலுவலா் வடிவேல் தலைமையில் கரூா் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வண்டியும், புகழூா் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு வண்டியும் என இரு தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாள்களுக்குள்ளாக 2ஆவது முறையாக தீப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.