கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ. 100 கோடி மதிப்பு நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக அமைச்சருக்கு ஜூலை 31 வரை காவல் நீட்டிப்பு

ஜூலை 31-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:51 pm

Din

கரூா் ஜூலை 19: ரூ. 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக மேலகரூா் சாா்-பதிவாளா் (பொறுப்பு) முகமது அப்துல்காதா் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், கரூா் மாவட்டம், வாங்கலைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் அளித்த நில அபகரிப்பு புகாரின் பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, கரூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆா். விஜயபாஸ்கரை வெள்ளிக்கிழமை போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் கரூருக்கு அழைத்து வந்தனா்.

கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2-இல் காலை 11.50 மணிக்கு நீதிபதி (பொறுப்பு) மகேஷ் முன்னிலையில் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மகேஷ், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ஆம்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டாா்.

இதையடுத்து மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆா்.விஜயபாஸ்கா் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் திரண்ட அதிமுகவினா் தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.