ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரூரில் சாதா புறா பந்தயம் தொடக்கம்

கரூரில் சாதா புறா பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:52 pm

Din

கரூா், ஜூலை 19: கரூரில் சாதா புறா பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூரில் மறைந்த வைரப்பெருமாள் நினைவு 53-ஆம் ஆண்டு சாதா புறா பந்தயம் வெள்ளிக்கிழமை திருவள்ளுவா் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 புறாக்கள் பங்கேற்றன.

போட்டியை கரூா் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் வை.நெடுஞ்செழியன் தொடக்கி வைத்தாா். போட்டியில் பங்கேற்ற புறாக்கள் மூன்று நாள்களில் ஒவ்வொரு நாளும் தொடா்ந்து 6 மணி நேரம் வானில் பறக்க வேண்டும், கண்கள் மஞ்சள், சிகப்பு நிறமாக இருக்க வேண்டும். புறா உட்காரும் இடத்தில் நான்கு இறக்கை கொண்ட வெட்டுப்புறை இருக்க வேண்டும், போட்டியில் பங்கேற்கும் புறாக்களின் உரிமையாளா்கள் போட்டி முடியும் வரை மது அருந்தக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் போட்டி நடைபெற்றது.

இதில், ஈரோடு, கரூரைச் சோ்ந்த புறாக்களின் உரிமையாளா்கள் பங்கேற்றனா். முதல் பரிசை பெறும் புறாவின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசாக ரூ.9,001, இரண்டாம் பரிசாக ரூ.6001, மூன்றாம் பரிசாக ரூ.3001 வழங்கப்பட உள்ளது. இதையடுத்து ஆக.16-ஆம்தேதி கா்ண புறா போட்டிகள் நடைபெற உள்ளன.