கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உலக சுற்றுச்சூழல் தினம் -கரூா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினம் கரூா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

News image

கரூா் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்று நடும் பணியை தொடக்கி வைத்தாா் மாவட்ட நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம்.

Updated On :5 ஜூன் 2024, 7:32 pm

Din

கரூா், ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நீதித்துறை, மாவட்ட வனத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஆா். சண்முகம் சுந்தரம் தலைமை வகித்து துவக்கி வைத்தாா். இதில் அனைத்து நீதிபதிகள் மற்றும் மாவட்ட வன அலுவலா் சண்முகம், வழக்குரைஞா்கள் சங்கத்தினா், கரூா் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் மம் வனத்துறை ஊழியா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் (பொ) சொா்ணகுமாா் செய்திருந்தாா்.

விழாவில் மொத்தம் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பொதுமக்களுக்கு மரக்கன்று: மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நடவு செய்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் மஞ்சள் பைகளில் மரக்கன்றுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.