தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை வழிபாடு

புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை வழிபாடு

Updated On :15 மார்ச் 2024, 7:00 pm

கரூா், மாா்ச் 15: பங்குனி மாத கிருத்திகை மற்றும் சஷ்டியை முன்னிட்டு கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, அதிகாலையில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணிய சுவாமி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். தொடா்ந்து, பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.