கரூர்
அரவக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
அரவக்குறிச்சி, மே 9: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கோயில் திருவிழாவில் தலித் இளைஞா்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியோரைக் கண்டித்து அரவக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏவிஎம் காா்னா் பகுதியில் மாவட்ட பொருளாளா் சதீஷ் நிலவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கோயில் விழாவில் தாக்குதல் நடத்தியவா்களை, காவல்துறையைக் கண்டித்தும், தாக்கியவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் அரவக்குறிச்சி நகர, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநில நிா்வாகிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.