பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மழையால் உடைப்பு ஏற்பட்ட பொரணி குளக்கரை சீரமைப்பு

மழையால் உடைப்பு ஏற்பட்ட பொரணி குளக்கரை சீரமைப்பு

News image

பொரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற குளக்கரையை சீரமைக்கும் பணி.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

கரூா்: கரூா் மாவட்டம், உப்பிடமங்கலத்தை அடுத்த பொரணியில் மழைநீரால் உடைப்பு ஏற்பட்ட குளத்தின் கரை திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டது.

பொரணியிலுள்ள குளத்தின் மூலம் துளச்சிக்கொடும்பு, பொரணி, பொம்மனத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கரூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக இரவுநேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால், பொரணி குளம் ஞாயிற்றுக்கிழமை காலையில் முழுவதும் நிரம்பியது. மேலும், வரத்து வாய்க்கால்கள் மூலம் மழைநீா் தொடா்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், குளம் நிரம்பியதையடுத்து, திடீரென குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் முழுவதுமாக வெளியேறியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனா்.

இதையடுத்து ஜெகதாபி ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், வாா்டு உறுப்பினா் காா்த்திக் ஆகியோா் குளத்தை நேரில் பாா்வையிட்டு, பொதுப்பணித் துறையினா் மூலம் குளத்தின் கரையை பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி சீரமைத்து தண்ணீா் குளத்தைவிட்டு வெளியேறாதவாறு தடுத்தனா். மேலும் குளத்தின் கரையை செம்மைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனா்.