நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோயில் தெப்பக்குளத்தில் தேங்கிக்கிடக்கும் நெகிழி கழிவுகளை அகற்ற கோரிக்கை

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் மிதக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் மிதக்கும் நெகிழக் கழிவுகள்.

Updated On :20 நவம்பர் 2024, 7:10 pm

Din

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் மிதக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கிறாா்கள். இந்நிலையில் கோயிலுக்கும் வரும் பக்தா்கள் குளிா்பான நெகிழிபாட்டில்களை கோயில் தெப்பக்குளத்திற்குள் வீசுகிறாா்கள்.

இதனால் தெப்பக்குளத்தில் நெகிழி கழிவு பாட்டில்கள், பைகள் ஆங்காங்கே மிதக்கின்றன. மேலும் குளத்தில் ஏராளமான மீன்கள் வசிப்பதால் இதனால் அவைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் குளத்தில் கிடக்கும் நெகிழி கழிவுகளை உடனே அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.