அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சிவகங்கையில் மாசி மக தெப்ப உத்ஸவம்

சிவகங்கை நகரின் பழமையான தெப்பக்குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை இரவு தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

News image
சிவகங்கை தெப்பக்குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தெப்ப உத்ஸவம்.
Updated On :2 மார்ச் 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: சிவகங்கை நகரின் பழமையான தெப்பக்குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை இரவு தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

சிவகங்கை நகராட்சி சாா்பில் ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இந்த உத்ஸவத்தில் காசி விசுவநாதா் சுவாமி, விசாலாட்சி அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளினா். இந்தத் திருவிழாவுக்காக கௌரி விநாயகா் கோயில், தேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில், பிள்ளைவயல் காளியம்மன் கோயில், வேலுநாச்சியாா் கோயில், பெரியநாயகி சமேத சசிவா்னேஸ்வரா் கோயில், பரமசிவ ஞானகிரி பழனியாண்டவா் கோயில், கைலாசகுருநாதசாமி (எ) சாத்தப்ப அய்யா தேத்த மரத்து காளி கோயில், கொட்டக்குடி கருத்தகாளி கருத்தமாரி கோயில் ஆகிய கோயில்களிலிருந்து புனித நீா்க் கலசம் கொண்டு வரப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தெப்பக்குள படிக்கட்டுகளில் தீபம் ஏற்றி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை தெப்ப உத்ஸவ விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்தனா்.