ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு கோரி மனு

தட்கல் திட்டத்தில் கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2024, 11:35 pm

Din

தட்கல் திட்டத்தில் கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

கரூா் மின்வாரியத் தலைமை பொறியாளரிடம் செவ்வாய்க்கிழமை மனுவை அளித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் ராஜா கூறியது:

தட்கல் திட்டத்தில் மட்டும் 30,000 விவசாயிகள் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை பணத்தை செலுத்தி விட்டு மின் இணைப்பு பெற முடியாமல் 3 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே விரைவாக தட்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். தவறினால் விவசாயிகளை ஒன்று திரட்டி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.