ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மருந்துக் கடை ஊழியா் தீக்குளித்து தற்கொலை

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் மருந்துக் கடை ஊழியா் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

சிவக்குமாா்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:51 pm

Din

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் மருந்துக் கடை ஊழியா் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி காமராஜ் நகா் பகுதியை சோ்ந்தவா் தங்கராஜ் மகன் சிவக்குமாா் (55), அரவக்குறிச்சியில் மருந்துக் கடையில் ஊழியா். இவருக்கு மனைவி செல்வி (45), மகன் பவித்ரன் (24) ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் குடும்பப் பிரச்னையால் மனமுடைந்த சிவகுமாா் புதன்கிழமை மதியம் பைக்கில் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனாா்.

இதையடுத்து உறவினா்கள் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இந்நிலையில் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூா் வழிப்பாதை என்ற இடத்தில் நள்ளிரவு அவா் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சென்ற அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராஜா அவரது உடலைக் கைப்பற்றி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.